நேச்சர் டிப் என்பது மைக்கோரைசா வகைப் பூஞ்சை அடங்கிய ஒரு ஆர்கானிக் தயாரிப்பாகும். இந்த பூஞ்சை வாழை மரத்தின் வேர்களில் வளர்ந்து, சல்லி வேர்களிலும் பரவுகிறது. இதனால், வாழை மரம் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை உள்ளிழுக்கிறது. வாழை விளைச்சலும் அதிகரிக்கிறது.
வெள்ளை வேர்கள் உருவாதல்: நேச்சர் டீப்பில் உள்ள மைக்கோரைசா என்னும் பூஞ்சையால் ஏராளமான வெள்ளை வேர்கள் உருவெடுக்கின்றன. இந்த வெள்ளை வேர்கள் வாழை மரம் ஊட்டச்சத்துக்களை உள்ளிழுக்க உதவுகின்றன.
சல்லி வேர்கள் அதிகரிக்கின்றன: நேச்சர் டீப் பயன்படுத்துவதால், சல்லி வேர்கள் அதிகரித்து, அவை மண்ணுக்கு அடியில் படர்ந்து பரவி தண்ணீரையும், சத்துக்களையும் அடியில் இருந்து உறிஞ்ச உதவுகின்றன.
ரசாயன உரங்களும், தண்ணீரும் கிடைப்பது: வேர்கள் நன்றாக வளர்ச்சி அடையாவிட்டால், வாழைப் பயிருக்குப் இடப்படும் ரசாயன உரம் அல்லது ஆர்கானிக் உரம் மற்றும் தண்ணீர் போதிய அளவுக்கு வாழை மரத்துக்குள் சென்றடைவதில்லை. நேச்சர் டீப் பயன்படுத்துவதால் இந்தக் குறை நீங்குகிறது. ஆழமாகவும், அகன்றும் வேர்கள் பிடிப்பதற்கு நேச்சர் டீப் உதவுவதால், ரசாயன உரௌம் அல்லது இயற்கை உரமும், தண்ணீரும் வாழைக் கன்றுக்குக் கிடைக்கின்றன.
வாழையின் வளர்ச்சி : நேச்சர் டீப் பயன்படுத்துவதால், வாழை மரம் சரியான வளர்ச்சி கண்டு, இலைகள் பச்சையாக வளர்கின்றன.
வலுவான அடிமரம்: சரியான அளவில் சரியான எடையுடன் வாழைக் குலை தள்ளுவதற்கு வாழை மரம் பெரியதாக இருக்க வேண்டியது முக்கியமாகும். முதல் தெளிப்பின் போது நேச்சர் டீப் பயன்படுத்துவதால், அடிமரம் அகலமாகவும், பெரிதாகவும் வளர்கிறது.
வாழைக் குலைகளை உருவாக்குதல்: வாழை மரத்தில் சரியான நேரத்தில் குலை தள்ளி, பூ பூப்பது மிகவும் முக்கியமானது ஆகும். அப்படி குலைதள்ளி பூ வெளியே வராவிட்டால், வாழை அறுவடை சிரமமாகிவிடும். சரியான நேரத்தில் குலையும், பூவும் தோன்றுவதற்கு நேச்சர் டீப் உதவுகிறது. வாழை மரத்தின் இயற்கையான வேர்களை விட நேச்சர் டீப் மூலம் உருவாகும் வேர்கள் 50 மடங்கு அதிகம் வேலை செய்கிறது.
வேர்கள் கருப்படைதல்: மண்ணின் வெப்பநிலை 10 டிகிரிக்குக் கீழே போகும்போது, குறிப்பாகக் குளிர் காலத்தில், வாழையின் வெள்ளை வேர்கள் கருப்பாகின்றன. இதனால் வாழைக் கன்றுக்கு தண்ணீரும், ஊட்டச்சத்துக்களும் கிடைப்பது குறைகிறது. நேச்சர் டீப் இதை நிவர்த்தி செய்கிறது.
வாழைக் காய்களின் அளவு, எடை மற்றும் பருமன்: குலை தள்ளிய பிறகு வாழைக்காய் பருத்து, உருவெடுக்கிறது. இந்த நேரத்தில் வாழைக்கு பொட்டாஷ் என்னும் பொருள் தேவைப்படுகிறது. நேச்சர் டீப் பொட்டாஷ், நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம், போரோன் போன்ற சத்துக்கள் எளிதில் கிடைக்கச் செய்கிறது, வாழைக் காய்கள் சரியான அளவுக்கு உருண்டு திரட்சியாக நல்ல எடையுடன் காய்க்கின்றன.
ஆர்கானிக் தயாரிப்பு: நேச்சர் டீப் ஒரு ஆர்கானிக் தயாரிப்பாகும். இது க்ளோமலின் என்னும் பொருளை மண்ணில் உற்பத்தி செய்கிறது. இதனால் மண்ணில் கார்பன் அதிகரித்து, மண்ணின் வளம் அதிகரிக்கிறது.
விளைச்சல் : நேச்சர் டீப் பயன்படுத்துவதால், வாழை விளைச்சல் 20-30% அதிகரிக்கிறது.
நேச்சர் டீப் பயன்பாடு: நேச்சர் டீப்பை வாழைப்பயிரில் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.
வாழை நடவு:
முதல் தெளிப்பு:
சொட்டு நீர்ப் பாசனத்தில் அல்லது டிரெஞ்ச்சிங் முறையில் தெளிக்க வேண்டும்.
வாழைக் கன்று நட்ட நாளில் இருந்து 50 வது நாளில்.
1000 வாழைக் கன்றுகளுக்கு 200 கிராம் வீதம்.
இரண்டாவது தெளிப்பு:
சொட்டு நீர்ப் பாசனத்தில் அல்லது டிரெஞ்ச்சிங் முறையில் தெளிக்க வேண்டும்.
150 முதல் 180 நாட்கள்.
1000 வாழைக் கன்றுகளுக்கு 200 கிராம் வீதம்.
நீங்கள் நேச்சர் டீப் வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
பாதுகாப்பு ஆலோசனைகள்::
***இந்த வலைதளத்தில் உள்ள தகவல்கள் குறிப்புக்காக மட்டுமே. விவரங்கள் மற்றும் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் இந்த புராடக்ட் லேபலையும், இதனுடன் உள்ள துண்டு வெளியீட்டையும் படியுங்கள்.